புதன், 16 செப்டம்பர், 2009

ENNAVALE

நட்பு காதலாகுமா
காதல்தான் நட்பாகுமா
என் பள்ளி வாழ்வில்
பெண்ணொருத்தி நுழைந்தாள்
சிரித்து பேசினாள்
குழந்தை போல் கொஞ்சினாள்
என் கேலி பேச்சுகளுக்கு
செல்லமாய் சினம் கொண்டு
வேகமாய் பாவித்து
மெதுவாய் அடித்தாள்
என் வாழ்வில் குறிஞ்சி
பன்னிரு வருட குறிஞ்சி அன்று
பன்னிரண்டாம் வகுப்பு குறிஞ்சி ஆம்
அவள் மீது கொண்ட நட்பு

மாறியதுகாதலாய்
இது ஒரு தலை காதலோ என்றெண்ணி
இருதலை கொல்லி எறும்பாய் தவித்தேன்
இறுதியில் காதலை சொல்ல முனைந்து
கடிதத்தோடு சென்றபோது
அவள் கண் மறைவினில் நான்
என் காதருகே அவள் குரல்
என் தோழன் எனக்காக
எதையும் செய்வானென்று
இப்படி பாலான நட்பை
பாழாக்க விரும்ப மனமில்லை எனக்கு
எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டு
இனிதாய் பேசினேன் என் தோழியிடம்.

கருத்துகள் இல்லை: