புதன், 18 நவம்பர், 2009

தொலைந்து போன என்னருமை கைபேசிக்கு

என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனை பிரிந்தாய்,?

வாழ்வில் ஒரு அங்கமாய்
என்னில் பாதியாய்
தனிமையில் தோழனாய்
உறங்க வைக்கும் அன்னையாய்
அதட்டி எழுப்பும் அண்ணனாய்
நாளை வேலை என்னவென்று
இன்றே வெளிப்படுத்தும் காரியதரிசியாய்
என் இரகசியங்கள்
பகிர்ந்து கொண்ட மெயக்காப்பாளனாய்

இரவும் பகலும் விழித்திருந்தாய்
என் வீட்டு நாய் போல
எனக்கான அழைப்புக்களையும்
வாய்ப்புக்களையும்
சலிக்காமல் கொண்டுவந்தாய்
உறவோடு ஒட்டி வாழ வைத்தாய்

என் விரல் தொட்ட
முதல் அன்னியம் நீ
உனக்கென நான் கொடுத்தது
ஒரு வேளை உணவே

உன் குரலோசை
எனக்கு குயில் பாட்டு
உன் சங்கீதமே
எனக்கு தாலாட்டு

என்ன தவம் செய்து
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனைப் பிரிந்தாய்.

என்னவளே

முட்டைக் கண்களும்
முல்லை பூ சிரிப்பும்
சாயம் பூசா உதடும்
சங்கு கழுத்தும்
உடைக்கு ஒத்த இடையும்
வெள்ளை மயில் நடையும்
உன்னிடம் உள்ளதிங்கு

கதைகளில் படித்திருக்கிறேன்
கற்பனை தேவதைகளை
காண்கிறேன் இங்கொரு
பாவையை தேவதையாய்

அகில உலகை இரசிக்க
அனுமதி பெற்ற கவிஞன் நான்-இது
அபத்தமான உறவுக்கல்ல
அன்பான நட்புக்கே.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

கன்னியரின் விளையாட்டு

வேணாண்டா சகவாசம், இது
வெட்டிபய சந்தோசம்,
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்கள் கட்டுவது போல்
கன்னியரின் விளையாட்டு
காளையரை கட்டி போடும்

முத்து பல்லழகி
முகம் பார்த்தா சிரிச்சிடுவா,
முத்தெடுக்க நீ நெனச்சா
மூழ்கித்தான் போய்ருவ .

தங்க உடம்புக்காரி
தகதகன்னு ஜொலிசிடுவா
உரசனும்னுநீ நெனச்சா
உசிருகே ஆபத்தாகும்,

மீன் குஞ்சு கண்ணுக்காரி

மை வைப்பா கண்ணுக்கு

வச்சது கண்ணுக்குத்தான்

ஆப்பு உனக்குத்தான்.