புதன், 18 நவம்பர், 2009
தொலைந்து போன என்னருமை கைபேசிக்கு
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனை பிரிந்தாய்,?
வாழ்வில் ஒரு அங்கமாய்
என்னில் பாதியாய்
தனிமையில் தோழனாய்
உறங்க வைக்கும் அன்னையாய்
அதட்டி எழுப்பும் அண்ணனாய்
நாளை வேலை என்னவென்று
இன்றே வெளிப்படுத்தும் காரியதரிசியாய்
என் இரகசியங்கள்
பகிர்ந்து கொண்ட மெயக்காப்பாளனாய்
இரவும் பகலும் விழித்திருந்தாய்
என் வீட்டு நாய் போல
எனக்கான அழைப்புக்களையும்
வாய்ப்புக்களையும்
சலிக்காமல் கொண்டுவந்தாய்
உறவோடு ஒட்டி வாழ வைத்தாய்
என் விரல் தொட்ட
முதல் அன்னியம் நீ
உனக்கென நான் கொடுத்தது
ஒரு வேளை உணவே
உன் குரலோசை
எனக்கு குயில் பாட்டு
உன் சங்கீதமே
எனக்கு தாலாட்டு
என்ன தவம் செய்து
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனைப் பிரிந்தாய்.
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனை பிரிந்தாய்,?
வாழ்வில் ஒரு அங்கமாய்
என்னில் பாதியாய்
தனிமையில் தோழனாய்
உறங்க வைக்கும் அன்னையாய்
அதட்டி எழுப்பும் அண்ணனாய்
நாளை வேலை என்னவென்று
இன்றே வெளிப்படுத்தும் காரியதரிசியாய்
என் இரகசியங்கள்
பகிர்ந்து கொண்ட மெயக்காப்பாளனாய்
இரவும் பகலும் விழித்திருந்தாய்
என் வீட்டு நாய் போல
எனக்கான அழைப்புக்களையும்
வாய்ப்புக்களையும்
சலிக்காமல் கொண்டுவந்தாய்
உறவோடு ஒட்டி வாழ வைத்தாய்
என் விரல் தொட்ட
முதல் அன்னியம் நீ
உனக்கென நான் கொடுத்தது
ஒரு வேளை உணவே
உன் குரலோசை
எனக்கு குயில் பாட்டு
உன் சங்கீதமே
எனக்கு தாலாட்டு
என்ன தவம் செய்து
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனைப் பிரிந்தாய்.
என்னவளே
முட்டைக் கண்களும்
முல்லை பூ சிரிப்பும்
சாயம் பூசா உதடும்
சங்கு கழுத்தும்
உடைக்கு ஒத்த இடையும்
வெள்ளை மயில் நடையும்
உன்னிடம் உள்ளதிங்கு
கதைகளில் படித்திருக்கிறேன்
கற்பனை தேவதைகளை
காண்கிறேன் இங்கொரு
பாவையை தேவதையாய்
அகில உலகை இரசிக்க
அனுமதி பெற்ற கவிஞன் நான்-இது
அபத்தமான உறவுக்கல்ல
அன்பான நட்புக்கே.
முல்லை பூ சிரிப்பும்
சாயம் பூசா உதடும்
சங்கு கழுத்தும்
உடைக்கு ஒத்த இடையும்
வெள்ளை மயில் நடையும்
உன்னிடம் உள்ளதிங்கு
கதைகளில் படித்திருக்கிறேன்
கற்பனை தேவதைகளை
காண்கிறேன் இங்கொரு
பாவையை தேவதையாய்
அகில உலகை இரசிக்க
அனுமதி பெற்ற கவிஞன் நான்-இது
அபத்தமான உறவுக்கல்ல
அன்பான நட்புக்கே.
ஞாயிறு, 1 நவம்பர், 2009
கன்னியரின் விளையாட்டு
வேணாண்டா சகவாசம், இது
வெட்டிபய சந்தோசம்,
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்கள் கட்டுவது போல்
கன்னியரின் விளையாட்டு
காளையரை கட்டி போடும்
முத்து பல்லழகி
முகம் பார்த்தா சிரிச்சிடுவா,
முத்தெடுக்க நீ நெனச்சா
மூழ்கித்தான் போய்ருவ .
தங்க உடம்புக்காரி
தகதகன்னு ஜொலிசிடுவா
உரசனும்னுநீ நெனச்சா
உசிருகே ஆபத்தாகும்,
வெட்டிபய சந்தோசம்,
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்கள் கட்டுவது போல்
கன்னியரின் விளையாட்டு
காளையரை கட்டி போடும்
முத்து பல்லழகி
முகம் பார்த்தா சிரிச்சிடுவா,
முத்தெடுக்க நீ நெனச்சா
மூழ்கித்தான் போய்ருவ .
தங்க உடம்புக்காரி
தகதகன்னு ஜொலிசிடுவா
உரசனும்னுநீ நெனச்சா
உசிருகே ஆபத்தாகும்,
மீன் குஞ்சு கண்ணுக்காரி
மை வைப்பா கண்ணுக்கு
வச்சது கண்ணுக்குத்தான்
ஆப்பு உனக்குத்தான்.
புதன், 28 அக்டோபர், 2009
அதிரடித் தீபாவளி
என்னவளே
அழகில் நீ லட்சுமி வெடி
பேச்சில் நீ சீனி சரவெடி
சுறுசுறுப்பில் நீ தரச்சக்கரம்
பொங்கி எழுவதில் நீ பூச்சரம்
உயரத்தில் நீ இராக்கெட்டு
வலிக்காமல் என்னை அடிக்கும் சாட்டை
உன் நடை பாம்பு மாத்திரை
உடையோ பொறி மத்தாப்பு
வர்ணத்தில் நீ கலர் தீக்குச்சி
பொறுமையில் நீ நெருப்பு பத்தி
என் இதயத்தை பிளந்த அணுகுண்டு
மொத்தத்தில் நீ என்
அதிரடித் தீபாவளி.
அழகில் நீ லட்சுமி வெடி
பேச்சில் நீ சீனி சரவெடி
சுறுசுறுப்பில் நீ தரச்சக்கரம்
பொங்கி எழுவதில் நீ பூச்சரம்
உயரத்தில் நீ இராக்கெட்டு
வலிக்காமல் என்னை அடிக்கும் சாட்டை
உன் நடை பாம்பு மாத்திரை
உடையோ பொறி மத்தாப்பு
வர்ணத்தில் நீ கலர் தீக்குச்சி
பொறுமையில் நீ நெருப்பு பத்தி
என் இதயத்தை பிளந்த அணுகுண்டு
மொத்தத்தில் நீ என்
அதிரடித் தீபாவளி.
புதன், 21 அக்டோபர், 2009
என்னவளே
நான் பிறந்த நாள் முதல்
உறவு கொண்டிருக்கிறேன்
உன்னிடம்,
உன்னை மிதித்து, மேல் ஓடி ,
விளையாடி, உருண்டு, உறங்கி ,
ஏன் உமிழ்ந்தும் கூட ,
திட்டியவரை தீர்த்து கட்ட
நினைக்கும் உலகத்தில்
உன் மேல் உமிழ்ந்தவனுக்கும்
இடமளிக்கும் உன்
பொறுமையை பார்த்தால்
பொறாமை எனக்கு,
ஒவ்வொரு மழையிலும்
உன் வாசனை நுகரும் பொழுது
என் பிறவிப்பயன் உணர்கிறேன்,
என் வீரம் கூட
உன் வழியே வருவது கண்டு
பெருமை கொள்கிறேன்
என் தாய் மண்ணே ,
உன்னை காதலிக்கா
மானிடரே இல்லை ,
நடக்கும் பல உயிர் பலிகளும்
உனக்காகத்தான் ,
உன்னையே பிரித்து
இது உனது,அது எனது
எனும் மானிடருக்கு
உறைக்கும்படியாக சொல்
அனைவரும் ஒருநாள்
உனதுள் என்று,
ஒ ,சுற்றதினரே ,
நான் இறந்த பின்
எரிக்காதீர்கள் என்னை ,
தயவு செய்து புதைத்து விடுங்கள்,
உயிரிழந்தாலும் ஆசை எனக்கு
என் தாய் மண்ணுக்கு உணவாக.
உறவு கொண்டிருக்கிறேன்
உன்னிடம்,
உன்னை மிதித்து, மேல் ஓடி ,
விளையாடி, உருண்டு, உறங்கி ,
ஏன் உமிழ்ந்தும் கூட ,
திட்டியவரை தீர்த்து கட்ட
நினைக்கும் உலகத்தில்
உன் மேல் உமிழ்ந்தவனுக்கும்
இடமளிக்கும் உன்
பொறுமையை பார்த்தால்
பொறாமை எனக்கு,
ஒவ்வொரு மழையிலும்
உன் வாசனை நுகரும் பொழுது
என் பிறவிப்பயன் உணர்கிறேன்,
என் வீரம் கூட
உன் வழியே வருவது கண்டு
பெருமை கொள்கிறேன்
என் தாய் மண்ணே ,
உன்னை காதலிக்கா
மானிடரே இல்லை ,
நடக்கும் பல உயிர் பலிகளும்
உனக்காகத்தான் ,
உன்னையே பிரித்து
இது உனது,அது எனது
எனும் மானிடருக்கு
உறைக்கும்படியாக சொல்
அனைவரும் ஒருநாள்
உனதுள் என்று,
ஒ ,சுற்றதினரே ,
நான் இறந்த பின்
எரிக்காதீர்கள் என்னை ,
தயவு செய்து புதைத்து விடுங்கள்,
உயிரிழந்தாலும் ஆசை எனக்கு
என் தாய் மண்ணுக்கு உணவாக.
என்னவளே
புன்னகையில் வரவேற்று,
பூக்களின் வாசம் அளித்து ,
புது மணம் பரவச்செய்து ,-என்
வாழ்வின் சில பகுதிகளில்
வர்ணம் தீட்டிய தாரகையே,
என்றென்றும் வரவேற்கிறேன் -உன்னை
என் இறுதிவரைத் தோழியாக,
வெள்ளை காகிதங்கள்
காவியங்கள் ஆனது
உன் உருவம் பொறித்த பொழுது,
வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள்
வர்ணனைகள் ஆனது -நீ
என் தோழியான பொழுது,
உன்னை குறிஞ்சி என மாட்டேன்
பன்னிரு வருட இடைவெளியில்-எனை
மறந்தாலும் மறந்து விடுவாய்,
நீ மல்லிகை அல்ல
மாலையில் வாடி விடுவதற்கு,
வாடா மல்லியும் அல்ல
கடுந்தோல் கொண்டவளாய் இருப்பதற்கு,
செந்தாமரையும் அல்ல
குளம் வற்றினால் உயிர் விடுவதற்கு,
முல்லையும் அல்ல -பிறர்
தயவில் படர்ந்து வளர,
என்றென்றும்
என் திசை நோக்கி
மலர்ந்திடும் நீ
என் வாழ்வின் "சூரியகாந்தி"
வெள்ளி, 16 அக்டோபர், 2009
என் வாழ்வில் ஒருவன்
வாய் திறந்து ,வயிறு தள்ளி
வண்டி போல அண்டி வைத்து
வருவோர் போவோரை இழுத்து
வம்பிழுக்கும் வெட்டிப்பயலே ,
எளியோரை வலியோனாய் வதைத்தாய்
வலியென்று அனைவருக்கும் உண்டு
என்பதை நீ மறந்து -சிறு நகை புரிந்து
அடிதடவி ஆனந்தம் கண்டாய்
செவ்வாய்க்கு பின் புதனாம்
அதன் பின் விடுமுறையா உனக்கு
அதன் பெயர் ஆப் அல்ல -இனி
அவர் செயலே உனக்கு ஆப்பு,
சொல்வதற்கு உனது பெயர் முத்தாம்
உண்மையில் நீ ஒரு வெத்தாம்
வாங்கி கட்டிக்கொள்ளும்
வாழ்வு இனி உனக்கு சொத்தாம்,
கத்தி வைத்தவன் என்பதால்
கத்தி கத்தி பேசிவிட்டாய்
உன் கத்தல் கதறல் ஆகும் வரை
எங்கள் கனவு முடியப் போவதில்லை,
என்னவர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல
சட்டியில் இட்டு வதக்கி எடுக்க
ஆலமரங்கள் அவர்கள்
வேருக்கு மட்டுமல்ல
விழுதுகளுக்கும் பலம் அதிகம்,
புத்தி அற்றவர்கள் என நினைத்தாயோ
புரிந்து கொள்வாய் நீ ஒருநாளில்
உன்னை தாடியோடு அலை கழிக்க
நாள்க்குறித்தேன் - இனி
தலை குனிவாய், அடி பணிவாய்
என் எருமை தொப்பை செப்பே.
வண்டி போல அண்டி வைத்து
வருவோர் போவோரை இழுத்து
வம்பிழுக்கும் வெட்டிப்பயலே ,
எளியோரை வலியோனாய் வதைத்தாய்
வலியென்று அனைவருக்கும் உண்டு
என்பதை நீ மறந்து -சிறு நகை புரிந்து
அடிதடவி ஆனந்தம் கண்டாய்
செவ்வாய்க்கு பின் புதனாம்
அதன் பின் விடுமுறையா உனக்கு
அதன் பெயர் ஆப் அல்ல -இனி
அவர் செயலே உனக்கு ஆப்பு,
சொல்வதற்கு உனது பெயர் முத்தாம்
உண்மையில் நீ ஒரு வெத்தாம்
வாங்கி கட்டிக்கொள்ளும்
வாழ்வு இனி உனக்கு சொத்தாம்,
கத்தி வைத்தவன் என்பதால்
கத்தி கத்தி பேசிவிட்டாய்
உன் கத்தல் கதறல் ஆகும் வரை
எங்கள் கனவு முடியப் போவதில்லை,
என்னவர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல
சட்டியில் இட்டு வதக்கி எடுக்க
ஆலமரங்கள் அவர்கள்
வேருக்கு மட்டுமல்ல
விழுதுகளுக்கும் பலம் அதிகம்,
புத்தி அற்றவர்கள் என நினைத்தாயோ
புரிந்து கொள்வாய் நீ ஒருநாளில்
உன்னை தாடியோடு அலை கழிக்க
நாள்க்குறித்தேன் - இனி
தலை குனிவாய், அடி பணிவாய்
என் எருமை தொப்பை செப்பே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
