புதன், 16 செப்டம்பர், 2009

ENNAVALE

இரவு தோற்று பொழுது விடிந்தது
என்னிடம் வந்தது குறுஞ்செய்தி
இரவில் கனவில் நானா என்று
ஆவலாய் கேட்டாள்என்னவள்
கனவை திரும்பி பார்ப்பதும் இல்லை
கண்ட கனவு நிற்பதும் இல்லை
உன்னை தவிர வேறு யாரென்று
உரிமையோடு பொய் சொன்னேன்
உறவை பிணைக்கும் நோக்கத்திலே
சொல்வேன் ஆயிரம் பொய்கள் கூட
என்னவளுக்காக.

கருத்துகள் இல்லை: