புதன், 21 அக்டோபர், 2009

என்னவளே

புன்னகையில் வரவேற்று,

பூக்களின் வாசம் அளித்து ,

புது மணம் பரவச்செய்து ,-என்

வாழ்வின் சில பகுதிகளில்

வர்ணம் தீட்டிய தாரகையே,

என்றென்றும் வரவேற்கிறேன் -உன்னை

என் இறுதிவரைத் தோழியாக,

வெள்ளை காகிதங்கள்

காவியங்கள் ஆனது

உன் உருவம் பொறித்த பொழுது,

வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள்

வர்ணனைகள் ஆனது -நீ

என் தோழியான பொழுது,

உன்னை குறிஞ்சி என மாட்டேன்

பன்னிரு வருட இடைவெளியில்-எனை

மறந்தாலும் மறந்து விடுவாய்,

நீ மல்லிகை அல்ல

மாலையில் வாடி விடுவதற்கு,

வாடா மல்லியும் அல்ல

கடுந்தோல் கொண்டவளாய் இருப்பதற்கு,

செந்தாமரையும் அல்ல

குளம் வற்றினால் உயிர் விடுவதற்கு,

முல்லையும் அல்ல -பிறர்

தயவில் படர்ந்து வளர,

என்றென்றும்

என் திசை நோக்கி

மலர்ந்திடும் நீ

என் வாழ்வின் "சூரியகாந்தி"

கருத்துகள் இல்லை: