புன்னகையில் வரவேற்று,
பூக்களின் வாசம் அளித்து ,
புது மணம் பரவச்செய்து ,-என்
வாழ்வின் சில பகுதிகளில்
வர்ணம் தீட்டிய தாரகையே,
என்றென்றும் வரவேற்கிறேன் -உன்னை
என் இறுதிவரைத் தோழியாக,
வெள்ளை காகிதங்கள்
காவியங்கள் ஆனது
உன் உருவம் பொறித்த பொழுது,
வஞ்ச புகழ்ச்சி வார்த்தைகள்
வர்ணனைகள் ஆனது -நீ
என் தோழியான பொழுது,
உன்னை குறிஞ்சி என மாட்டேன்
பன்னிரு வருட இடைவெளியில்-எனை
மறந்தாலும் மறந்து விடுவாய்,
நீ மல்லிகை அல்ல
மாலையில் வாடி விடுவதற்கு,
வாடா மல்லியும் அல்ல
கடுந்தோல் கொண்டவளாய் இருப்பதற்கு,
செந்தாமரையும் அல்ல
குளம் வற்றினால் உயிர் விடுவதற்கு,
முல்லையும் அல்ல -பிறர்
தயவில் படர்ந்து வளர,
என்றென்றும்
என் திசை நோக்கி
மலர்ந்திடும் நீ
என் வாழ்வின் "சூரியகாந்தி"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக