வியாழன், 8 அக்டோபர், 2009

கருவாச்சி காவியம்

பொட்டல்காடு வழிய புளிதிபறக்க

லாரி வண்டி வந்துச்சி

கல்லு மண்ணு ஏத்திகிட்டு

எங்க ஓருக்கு புது ரோடு போட

அத்தனை பேரு வேல பாக்க

அதுல ஒருத்தரு மட்டும் குழாயே மாட்டிகிட்டு

கொஞ்சம் கருப்புனாலும் சுறு சுறுப்பா

அப்ப அப்பே காப்பி தண்ணி , ஒர மோரு கொடுத்தேன்

அபடியே மனசையும் சேத்து

ஒரு நா பேய் மழைல நனைஞ்சவுகளே

வீட்டுக்குள்ள கூப்டு உக்காத்தி வச்சி

காப்பி தண்ணி கொடுக்க்கலாமுண்டு

அடுப்ப பத்தே வச்சா

அந்த குளிருக்கு அடுபுதன் பத்தலே

பத்தி கிச்சு எங்க மனசு

ஏதோ நினைப்புலே எசகு புசக்க ஆகிபுடே

அன்னைக்கே சொன்னாகே நீதான் என் உசிருனு

ரோடு வேல முடியிற வரைக்கும்

கயிறு கட்டாமலே வாழ்ந்தூம்

புருசம் பொஞ்சாதிய

கூடியே சீக்கிரமா குடும்பத்தோட வந்து

கூட்டிட்டு போறேன்னகே முனியாண்டி சத்தியமா

இந்த வரேன்னு பூனாகே

இன்ன வரைக்கும் வரலே , சேதி கூட

போனே ரெண்டர மாசத்துலே வாந்தி எடுக்க

மருத்துவச்சி பாத்துட்டு வயித்துலே ரெண்டு உசிருன்னா

பப்பாளிக்க கொடுத்து கலேசிடத்தன்

சொன்னகே ஊருக்குள்ளே

ஒரேயடியா மட்டேன்னுடேன்

என் உசிரும் உள்ள இருக்குன்னு

பொழுது நாளாச்சி

பெற்றதும் வளந்துபோச்சி

என்னவருட்டேருந்து சேதி வல்லே

என்னிக்காச்சும் ஒருநாள்

என் மன்னவரு வருவாருன்னு

நம்பித்தான் உசிரோட இருக்கேன்

இதுதான் உன் புள்ளைன்னு காட்டே

இருந்தும் கொஞ்சம் பதட்டம்தான் இருக்கு

என் மவராசன் எப்படி இருக்கரோன்னு .



கருத்துகள் இல்லை: