வாய் திறந்து ,வயிறு தள்ளி
வண்டி போல அண்டி வைத்து
வருவோர் போவோரை இழுத்து
வம்பிழுக்கும் வெட்டிப்பயலே ,
எளியோரை வலியோனாய் வதைத்தாய்
வலியென்று அனைவருக்கும் உண்டு
என்பதை நீ மறந்து -சிறு நகை புரிந்து
அடிதடவி ஆனந்தம் கண்டாய்
செவ்வாய்க்கு பின் புதனாம்
அதன் பின் விடுமுறையா உனக்கு
அதன் பெயர் ஆப் அல்ல -இனி
அவர் செயலே உனக்கு ஆப்பு,
சொல்வதற்கு உனது பெயர் முத்தாம்
உண்மையில் நீ ஒரு வெத்தாம்
வாங்கி கட்டிக்கொள்ளும்
வாழ்வு இனி உனக்கு சொத்தாம்,
கத்தி வைத்தவன் என்பதால்
கத்தி கத்தி பேசிவிட்டாய்
உன் கத்தல் கதறல் ஆகும் வரை
எங்கள் கனவு முடியப் போவதில்லை,
என்னவர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல
சட்டியில் இட்டு வதக்கி எடுக்க
ஆலமரங்கள் அவர்கள்
வேருக்கு மட்டுமல்ல
விழுதுகளுக்கும் பலம் அதிகம்,
புத்தி அற்றவர்கள் என நினைத்தாயோ
புரிந்து கொள்வாய் நீ ஒருநாளில்
உன்னை தாடியோடு அலை கழிக்க
நாள்க்குறித்தேன் - இனி
தலை குனிவாய், அடி பணிவாய்
என் எருமை தொப்பை செப்பே.
வெள்ளி, 16 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக