என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனை பிரிந்தாய்,?
வாழ்வில் ஒரு அங்கமாய்
என்னில் பாதியாய்
தனிமையில் தோழனாய்
உறங்க வைக்கும் அன்னையாய்
அதட்டி எழுப்பும் அண்ணனாய்
நாளை வேலை என்னவென்று
இன்றே வெளிப்படுத்தும் காரியதரிசியாய்
என் இரகசியங்கள்
பகிர்ந்து கொண்ட மெயக்காப்பாளனாய்
இரவும் பகலும் விழித்திருந்தாய்
என் வீட்டு நாய் போல
எனக்கான அழைப்புக்களையும்
வாய்ப்புக்களையும்
சலிக்காமல் கொண்டுவந்தாய்
உறவோடு ஒட்டி வாழ வைத்தாய்
என் விரல் தொட்ட
முதல் அன்னியம் நீ
உனக்கென நான் கொடுத்தது
ஒரு வேளை உணவே
உன் குரலோசை
எனக்கு குயில் பாட்டு
உன் சங்கீதமே
எனக்கு தாலாட்டு
என்ன தவம் செய்து
நான் உன்னை பெற்றேன்
இன்றென்ன பாவம் செய்தேன்
நீ எனைப் பிரிந்தாய்.
புதன், 18 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக